குடிசை வாழ் மக்களுக்கு வீடுகட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் –  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

அப்பொழுது அவர் கூறுகையில், மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டி கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.