டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல் பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.