கோவையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். 

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும்,கோவையில் எந்தஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரத போராட்டமானது நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment