இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்…!

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம். 

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment