ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது – ஜெயக்குமார்

ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.