டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..!

டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 7 க்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் கொரோனா தொற்று கோரத்தாண்டம் ஆடிய நிலையில், மிகுந்த  பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அனைத்து விதமான கல்வி சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடைபெற டெல்லி அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசு தேர்வெழுதும் மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் உள்ளனர்.

இதனையடுத்து, நேற்று டில்லி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் / ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ஜூன்7 க்கு ஒத்திவைத்துள்ளது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு தெரிவித்துள்ளது. மேலும், தேர்வுகள் மே 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், தலைநகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தேர்வுகள் ஜூன் 1 வரை ஒத்திவைக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.