ஆப்கானிஸ்தானில் வன்முறை நீடித்ததால் 24 பேர் பலி….ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான்ஆங்காங்கே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் காரக் பகுதியில் உள்ள தங்கள் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது  மோட்டார் சைக்கில் மோதியது. அதனால் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், நேற்று முன்தினம் இரவு கோரின் மாகாண தலைநகர் ஃபிரோஸ் கோவாவில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.