டெல்லியில் பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியைக் கண்டித்து போராட்டம்!

டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்  பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற கடன்மோசடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வைர வணிகர்களான நீரவ் மோடியும் அவர் தாய்மாமன் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்வாங்கி மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டுத் , பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற மோசடியைக் கண்டித்து  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment