#IPL2022: 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 3 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.

இதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். மறுமுனையில் இருந்த கேன் வில்லியம்சன் 4 ரன்கள் எடுத்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த ராகுல் திரிபாதி 22 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஐடென் மார்க்கம் – நிகோலஸ் பூரண் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார்கள்.

இதில் 42 ரன்கள் எடுத்து ஐடென் மார்க்கம் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.