புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தர்ணா நடைபெறும்..!  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தர்ணா நடைபெறும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், பாஜக நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஜனவரியில் நாடாளுமன்றம் முன் அனைத்து கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வலியுறுத்தியும் புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் தர்ணா  போராட்டம் நடத்தப்படும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment