BREAKING :மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு .!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1-ஆம் தேதி  காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 15-ஆம் தேதி முடிவடையவிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் புதிய கொரோனா  நோய்த்தொற்றுகளுக்கு முதலிடம் வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மேலும் , கடந்த 24 மணி நேரத்தில் 46,781 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 816 பேர் தொற்றுநோயால் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk