குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தமுள்ள 8 வார்டில் அதிமுக -திமுக தலா 4 வார்டில் வெற்றி பெற்றனர். இதனால், கடந்த முறை நடந்த மறைமுக தேர்தலின் போது திமுக உறுப்பினர்கள் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடந்த தேர்தலின் போது மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்ததால் திமுக உறுப்பினர்கள் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  குற்றாலம் பேரூராட்சி தேர்தலில் அதிமுக -திமுக சமமான இடங்களில் வெற்றி பெற்றதால் தலைவரை தேர்ந்தெடுப்பது இழுபறி ஏற்பட்டு வருகிறது.

author avatar
murugan