கோமியத்தை குடித்து..கொரோனாவில் இருந்து தப்பிக்க மகாசபா ஜடியா!கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க  அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த செயல் சமூகவலையதளத்தில் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.

உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் 5500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.மேலும் இந்த வைரஸ்க்கு ஏராளாமனோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் தான் கொரோனா வைரஸை தடுக்க மாட்டு கோமியம் மருந்து என்று இந்து மகாசபா தலைவர்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறி வந்த நிலையில் டெல்லியில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் அனைவரும் மாட்டு கோமியத்தை அருந்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.தற்போது இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha