கார்த்தி படத்தையும் விடாது துரத்தும் கொரோனா!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இதன் தாக்கம் பரவிய நிலையில், இன்று உலகம் முழுவதையும் இந்த நோய் பயத்திற்குள்ளாக்கி வருகிறது. 

இந்த கொரோனா பாதிப்பால், வெளிநாட்டுகளில் எடுக்கப்பட்டு வந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கொரோனா அவுட் பிரேக் சுல்தான் படத்தின் அப்டேட் உட்பட எல்லாவற்றையும் பாதித்துள்ளது. அமைதியாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்று தனது இணைய பக்கத்தில் கூறியிருக்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.