பரபரப்பான பரவும் சூழலில்! பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது.மேலும் பலி எண்ணிக்கையானது 75யாக உயர்ந்து உள்ளது.நோய் தொற்று அதிகமாக பரவி காணப்படும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.அங்கு மட்டும் 490 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் அதாவது 2 வது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளுக்கு நாள் பரவல் அதிகாகி கொண்டே செல்கிறது.இந்நிலைமையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஆனது காணொலி காட்சி மூலமாக  நடக்க உள்ளது.மேலும் பிரமர் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும்;முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha