ஒரே நாளில் இந்தியாவில் 88பேர் அனுமதி..பாதிப்பு 694 அதிகரிப்பு-மத்திய சுகாதாரத்துறை தகவல்

இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நேற்று  காலை வரை இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்தாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.அடுத்தடுத்து 3 உயிரிழப்புகள் என மொத்தம் 16 பேர்  மடிந்துள்ளனர். தமிழகத்தில் 29பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை தற்போது இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ்க்கு 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

author avatar
kavitha