சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சிங்கப்பூரில் வசித்து வரும் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார். இதில் 50 சதவீதத்தினர்  தங்கியிருக்கும் இடங்களில் நெருக்கமாக தங்கியிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்திய தூதர், இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.