அமைச்சருக்கு கொரோனா – சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர்!

அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தன்னை தானே சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முதல்வர், பிரதமர் என முக்கியமான அரசியல்வாதிகளுக்கும் இந்த கொரானாவின் தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள விவகாரத்துறை அமைச்சர் சுல்ஃகிப்லி முகமது அல் பக்ரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த மூன்றாம் தேதி விவகாரத் துறை அமைச்சருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசிய பிரதமர் முகைதின் யாசின் அவர்கள் அமைச்சருக்கு கொரானா என்றதும் தானும் பரிசோதனை செய்து பார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தன்னை 14 நாட்களுக்கு சுய தனிமைப் படுத்திக் கொள்வதாக பிரதமர் முகைதீன் அவர்கள் அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal