நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை-முதல்வர் பழனிசாமி

நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக  தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

4.18 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜிங்க் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.