ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா..!

இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் இருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா .

இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஓமைக்ரான் & மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது. அதில் 995 பேர் குணமடைந்துள்ளனர். 1635 பேர் ஒமைக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் தொற்றால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan