BREAKING:தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா – முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி .!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று காலை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தற்போது தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருகிறார்.

அப்போது ,பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் தற்போது புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 50 -லிருந்து 67 ஆக அதிகரித்து உள்ளது என கூறினார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறினார்.

author avatar
murugan