அமெரிக்காவில் கொரோனோ தொற்றால் ஒரு வயது குழந்தை பலி… வேறு சில உடல் பிரச்சனைகள் இருந்ததாகவும் அறிவிப்பு…

கொரோனா  வைரஸ் தொற்று  மிகவும்  வேகமாக உலகம் முழுவதும்  பரவி வருகிறது.  உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா  தொற்று உள்ளோரின்  எண்ணிக்கை ஒரு  லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களான வயதானவர்களே. இந்நிலையில், அமெரிக்காவின், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இது உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடையும் விதமாக அமைந்தது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அந்த  வைரஸ் பாதிப்பின் காரணமாக  அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை அந்த மாகாணத்தின்  கவர்னரும்  உறுதி செய்தார். உலகிலேயே இந்த  வைரஸ் பாதிப்பால், 1 வயதுக்குட்ட குழந்தை உயிரிழப்பது, இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின்  சிகாகோ மாகாணத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு வயது  குழந்தைக்கு வேறு உடல் பிரச்சனைகளும் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தற்போது  அறிவித்துள்ளனர்.

author avatar
Kaliraj