தொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தொகுதி பணங்கிடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.

இம்மாதம் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குகிறது. அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய அவசியம் பிரதான கட்சிகளுக்கு உள்ளது. இந்நிலையில் இன்று இரவுக்குள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை மதிமுக இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் 4 இடங்கள் வரை ஒதுக்க திமுகமுன்வந்திருந்தது. தற்போது, 5முதல் 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்