#Breaking : முதலமைச்சருடனான ஆலோசனை நிறைவு ! மீண்டும் துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை

முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள் மீண்டும் துணை முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை எழுந்து வருகிறது.இதற்கு இடையில் தான் 2021ல் நிரந்திர முதல்வர் ஓபிஎஸ் என தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டது .எனவே தான் இன்று  அமைச்சர்கள் ஜெயக்குமார்,செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம்,தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கட்சியில் உள்ள  பொறுப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பன்னீர்செல்வத்துடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.இதன் பின் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது இந்த ஆலோசனை நிறைவு பெற்ற நிலையில் ஒரு அமைச்சர்கள் மீண்டும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தின் வீட்டிலும், சண்முகம்,உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சர் வீட்டிலும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.