அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிதம்பரத்தின் மனைவி நளினி நீட் தேர்விற்கு ஆதரவான வழக்கில் வாதாடியதாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை பேசினார்.மேலும் நீட்டைக் கொண்டுவந்த காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்தது தி.மு.க என்றும் பேசினார்.இவரது பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அவை குறிப்பில் இருந்து இன்பதுரை பேசியதை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.