முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று கேள்வி நேரத்துடன் இரண்டாவது நாளாக  தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.

அப்பொழுது 110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில் , தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும் இணைத்து முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும் என்றும்  உதவி மையம் அமைக்க ரூ.12.78 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.