எல்லைப் பிரச்சினை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்..?

கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைதொடந்து, எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு தரப்பிலும், பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் உடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராஜ்நாத் சிங்  நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan