ஜார்கண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்..!எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு

  • ஜார்கண்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு
  • பாஜக கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிப்பு

ஜார்கண்டில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அன்மையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு  இடையே கடும் போட்டி நிலவியது இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.இந்நிலையில் அம்மாநிலத்தில் யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்ற கணிப்பை சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைக்கலாம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 2 தொகுதிகள்  மற்றும் மகாகட்பந்தன் கூட்டணி என மொத்தம் 42 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அங்கு ஆட்சி அமைக்கும் என கணித்து உள்ளது.

அதே போல பாஜக 27 தொகுதி கிடைக்கும் என்று தெவித்துள்ளது.அதன்படி ஏஜேஎஸ்யூ கட்சி 4 தொகுதிகள்,ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 4 தொகுதிகள் என்று பாஜக கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணித்து உள்ளது.

 

author avatar
kavitha