தமிழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் பழனிசாமி

இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா  மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.எனவே சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள்  பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக  அரசு கடந்த  2019 ஆம் ஆண்டு அறிவித்தது.அதன்படி நவம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,செந்தமிழாம் தாய்மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு எனும் பெயர் பெற்ற இந்த நன்னாளில், தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.