இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் – முதல்வர் பழனிசாமி

இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு  செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருவதாக கூறப்பட்டு வருகிற நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், மாதம் ஒருமுறை இ-பாஸ் புதுப்பித்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளி மாநில தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.