மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றுள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் ஏற்பட்டபோது பிஜேநகர் பாஜக வேட்பாளர் சிவசச்சி தத்தாவும் அந்த இடத்தில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தத்தா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு சாவடியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயன்றனர்.
அதை செய்ய முடியததால் அவர்கள் வன்முறையை உருவாக்கினார் என்றார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும். தற்போது 5 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…