அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து 27 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலூரில், வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிகளில், ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாணியம்பாடி, மாலை 6 மணிக்கு ஆம்பூரில் பிரசாரம் செய்கிறார் . 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம், மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில் பிரசாரம் செய்கிறார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு, மாலை 6 மணிக்கு வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.