சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

வல்லபாய் படேலின் சிலை போன்று இங்கு காமராஜரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். காமராஜருக்கு புகழ் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரத்குமார் நிரூபித்துள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.