இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் பெறும்-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார் .அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் . சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.