மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட  அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு…!

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட  அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 5 கண்மாய்களுக்கு நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க  உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதர வைகை பூர்வீக பாசன பகுதிக்கு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தண்ணீர் திறக்க பிறப்பித்துள்ளார். பகுதி-1ஐ சார்ந்த 4 கண்மாய்களுக்கு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தண்ணீர் திறக்க பிறப்பித்துள்ளார்.

Leave a Comment