சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகைசால்தமிழர் விருது சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார். பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதல்வரிடம் என்.சங்கரய்யா வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.