மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து 9 இடங்களில், மதியம் 1 மணி வரை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடன் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment