திருமாவளவனுக்கு வேறு வேலை கிடையாது – கரு.நாகராஜன்

திருமாவளவனுக்கு வேறு வேலை கிடையாது. தூங்கி முழித்ததும் எத்தனை முறை பா.ஜ.க. திட்டுவது என குறித்து வைத்து வருகிறார் என கருநகராஜன் விமர்சனம். 

சென்னையை அடுத்த ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவை விட மக்களுக்கு தேவையான போராட்டங்களில் பா.ஜ.க. ஈடுப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டாலும் பா.ஜ.க.வும் மக்களுக்கு குரல் கொடுப்பதில் இணையாக பணியாற்றுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் ஏற்பட்டு உள்ள பிரச்சனை, குழப்பம் முழுக்க முழுக்க உட்கட்சி பிரச்சனை. அந்த பிரச்னையில் கருத்து சொல்ல முடியாது. ஆனால் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களே வரவேற்பார்கள். திருமாவளவனுக்கு வேறு வேலை கிடையாது. தூங்கி முழித்ததும் எத்தனை முறை பா.ஜ.க. திட்டுவது என குறித்து வைத்து வருகிறார்  விமர்சித்துள்ளார்.

Leave a Comment