திமுகவால் முடியாததை முதலமைச்சர் 10 நாட்களில் செய்து முடித்தார்.! சட்டத்துறை அமைச்சர் பேச்சு.!

  • தமிழக சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் செய்து சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் அரசு என்பதன் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நடந்த  விவாதத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், 18 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக செய்ய முடியாததை 10 நாட்களில் சட்டம் கொண்டுவந்து முதலமைச்சர் சாதித்து காட்டியதாக சட்டத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பின்னர் வேளாண் மண்டல சட்டம் குறித்த விவாதத்தில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்