ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்று மரக்கன்றுகள் மணமக்களை வாழ்த்திய முதல்வர்

தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி மற்றும், மணமக்கள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.