ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்து முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், சபாநாயகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.