அதிமுகவில் மாற்றம் அவசியம் – செல்லூர் ராஜூ

தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.

அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய செல்லூர் ராஜூ, தலைமையை நம்பி அதிமுக இல்லை என்றும் தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்