மோடிக்கு பல்வகை திறமைகள் இல்லை.. அவருக்கு ஆளுமை இல்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அதிரடி பேச்சு

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுமை திறன் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்
  • ஒரு மிகப் பெரும் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு பல்வகைத் திறமை தேவை, அவை நரேந்திர மோடிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த பல மாதங்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நரேந்திர மோடியை காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பல வகையான திறமைகள் தேவை. அவை நரேந்திர மோடிக்கு சுத்தமாக இல்லை. அவருக்கு ஆளுமை திறன் மிகவும் குறைவு. அனைவரும் கூறுவதைப்போல குஜராத்தில் அவர் பெரும் மாற்றங்களை உருவாக்கி விடவில்லை. பொருளாதார அறிவுத்திறன் அவருக்கு பெரிதாக ஏதும் இல்லை. பலரும் நம்பிக் கொண்டிருப்பதைப் போல மோடிக்கு பெரிதான ஆளுமைத்திறன் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

author avatar
Srimahath

Leave a Comment