தேர்தல் ஆணையத்திடம் நாம்தமிழர் கட்சி கேள்வி…

  • தேர்தல் ஆணையத்திடம் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி.
  • விவசாயிகள் உயிரோடு இல்லை என நினைக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சீமான் மக்களவை தேர்தலில் விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் சீமானுக்கு “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், சீமான் உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது என்று சொல்லிவிட்டு தனக்கு விவசாயி சின்னத்தை தந்துள்ள தேர்தல் ஆணையம், விவசாயிகள் உயிரோடு இல்லை என நினைக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment