திமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

திமுக  கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி  மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் கூறுகையில், திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்  என்று தெரிவித்துள்ளார்.