பிகில் படம் குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் போட்ட ட்வீட்! ஷாக்கான ரசிகர்கள்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளநிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இகனையடுத்து, பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிகாலை 1 மணி ஷோ நடைமுறைக்கு இயலாது, ஆனால் 4 மணி ஷோக்கு கடுமையாக முயற்சி செய்கிறோம் என பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.