Bengaluru:ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழப்பு சிசிடி காட்சி

பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார்.

அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது  மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட சிசிடிவி காட்சிகள், ஸஃயூட் ரேக்(squat rack) அருகே பெண் சரிந்து விழுந்ததைக் காட்டுகிறது. ஜிம்மில் இருந்த ஊழியர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் வினயாவை உடனடியாக அருகில் உள்ள சிவி ராமன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், மருத்துவரின் பரிசோதனையின் அடிப்படையில், வினயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  காவல்துறையினர் தெரிவித்தனர்.

author avatar
Castro Murugan