தாயை கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை..!

குடிக்க பணம் தர மறுத்ததால் தாய் லீலாவதியை எரித்துக் கொன்ற வழக்கில் மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கடந்த ஆண்டு மருதான்மலையில் தாயை எரித்துக்கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். குற்றவாளிக்கு எந்த சலுகையும் அரசு வழங்க கூடாது. தவறை உணர்ந்து திருந்த சந்தோஷ் மூன்று மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

குடிக்க பணம் தர மறுத்ததால் தாய் லீலாவதியை எரித்துக் கொன்ற வழக்கில் மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.