திமுக எம்பி ராசாவுக்கு சிபிஐ சம்மன்!

திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, திமுக எம்பி ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சரதாங்கனி ஆகிய 4 பேரும் ஜனவரி 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது கடந்த 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராசா மீதான வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment