திமுக எம்பி ராசாவுக்கு சிபிஐ சம்மன்!

திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, திமுக எம்பி ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சரதாங்கனி ஆகிய 4 பேரும் ஜனவரி 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது கடந்த 2015-ல் சிபிஐ … Read more

#Breaking:திமுக எம்பி என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் பலி!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் தடுப்புச் சுவரில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.ராகேஷ் வயது 22. மேலும்,விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி!

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் … Read more

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய திமுக எம்.பி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.  பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி … Read more